3 Nov 2009

சொற்றொடரால் நினைவுபெரும் தருணம்

சொல்லின் வலிமை மிக பெரியது.

பாராட்டு சொல்லை பெறும்போதும்,இகழ்ச்சி சொல்லை பெரும் போதும் உள்ள மனநிலைகளை நாம் அறிவோம்.

நாம் யாரும் கடந்துவராத தருணங்கள் அல்ல அவை.

அப்படிப்பட்ட சொல்லை கொண்டு அமையப்பெற்ற சொற்றடரால் நினைவுகூரப்படும் மூன்று தருணங்களின் தொகுப்பே இது.

நீங்கள் உங்கள் நண்பர்களை கலாய்த்து(மொக்கை இடுதல்) உள்ளீர்களா?

நான் கல்லூரி படித்து கொடு இருந்த சமயம் அது...ஒரு முறை மதிய சாப்பாட்டிற்காக நாங்கள் பத்துபேர் நடந்து கொண்டு இருந்தோம் ..

அருண் வெங்கடேஷ் தான் அன்று யாரையோ கலாய்த்து கொண்டு  இருந்தான்

அப்பொழுது அவன் உதிர்த்த ஒரு பழமொழி தான் இன்றுவரை அந்த தருணத்தை நினைவில் வைத்து இருக்க செய்கிறது ..

அது ..

இது என்ன "தெருவை இழுத்து தேர்ல விட்ட கதையாய் இருக்கு"

இன்னொரு தருணம் எனக்கும் வினோஜ் க்கும் இடையில் நடந்தது...காதலனோ காதலியை காண VVV  பெண்கள் கல்லூரி வாசலில் காத்து இருக்கிறார் ..காதலன் நான் இல்லை ..

அப்போது ஏதோ ஒரு விளையாட்டு வாக்குவாதம் பெரிதாகிவிட நான் கோபத்தில் சொன்னா சொற்றொடர் நிலைமையை மாற்றியது ..

அது ..

"நீயெல்லாம் உப்புல சோத்த போட்டு தானே திங்குற"

மூன்றாவது சம்பவம் நேற்று நடந்தது ..இந்த பதிவை எழுத தோன்றியதே அந்த சம்பவத்தின் பின்னர்தான்...

அன்பேவா நாடகத்திற்கு பின்னரான அரட்டையின் போது முனீஸ் சொன்ன வார்த்தை நேற்று இரவு பதினோரு மணிவரை சிரிப்பில் ஆழ்த்திய வாக்கியம்..

"தங்கசிடோட Wife"

இதன் போன்று நீங்களும் பல சொற்றொடர்களை கடந்து இருப்பீர்கள் ..பகிர்ந்து கொள்ளுங்கள் .தருணங்கள் எப்போதும் நினைவில் இருக்கட்டும்.