25 Mar 2009

நடிகர்கள் அறிவற்றவர்களே..

முரண் தொடை அவர்களின் பதிவுக்கு பதில் பதிவு.
அறிவை எதை கொண்டு அளப்பது?உங்கள் சிந்தனைகள்,சிந்தித்ததன் விளைவாக வரும் வார்த்தைகள் ஆகியவை கொண்டு அளக்கலாம்.ஒருவேளை அது தவறு என நினைத்தீர்கள் எனில் நீங்கள் தயவு செய்து "அறிவாளி","முட்டாள்" என்ற சொற்களின் பயன்பாடு குறித்து ஒரு பதிவு இடலாம்.

முந்தய தலைமுறையில் மக்களுக்கும் சமூக பார்வை இருந்தே இருக்கிறது.நடிகர்களுக்கு பெரும்பாலும் சமூக பார்வை இல்லை .அவர்களின் தாக்கமே இன்றைய மக்களின் மனநிலை.

"சமூகபார்வைக்கும் அறிவுக்கும் என்ன தொடர்பு?" என நீங்கள் கேட்டு இருப்பது உங்கள் பின்னூட்டத்தில் வந்து இருப்பது போல நகைப்புக்கு உரியதாய் இருக்கறது.

அறிவு முதிர்ச்சி பெறாத குழந்தையின் சமூக பார்வையும்,வளர்ந்தவர்களின் சமூக பார்வையும் வேறுபடும் என்பதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சினிமா என்பது கலை,கலை கலையே...நீங்கள் வியாபாரம் என கொள்வதானால் "கலை சேவை வரி" என்ற ஒன்று எதற்கு?சரி அப்படியே வியாபாரம் எனில் சினிமா படங்கள் குறித்து விமர்சனம் எழுதுபவர்களிடம்..இன்று கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரம் குறித்தும் விமர்சனம் எழுத சொல்லலாமே.ஏன் இந்த ஓரவஞ்சனை பதிவர்களுக்கு?(உங்கள் கருத்தின் படி)

அட இவர்கள் பொய் சொல்வதை கண்டு அவர் வருத்த படுவதில் என்ன தவறு இருக்கிறது?இன்று விஜயோ,சிம்புவோ இளைஞர் வட்டத்தில் பிரதிபலிப்பது இல்லை என்று நீங்கள் கூறி விட முடியுமா?
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆதங்கம்.ஒரு நல்ல கருத்தை சொல்வதால்(அவர்கள்) பெரும்பான்மையானவர்களை போய் சேருமே.அதை விடுத்து ..வாழ்கை ஒரு வட்டம்,சதுரம் என்று சொல்லிக்கொண்டு இருப்பது அடுக்குமா?

பெரியார் சொன்ன கருத்துக்களால் தான் இன்று சமூகம் கொஞ்சமேனும் மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.குஷ்பு சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் சமூகம் மாறவிடாமல் செய்ததே இந்த நடிகர்களின் வேலை தானே.

சீமான் மட்டும் உள்ளே இல்லை..சரி இன்று அவர் சொன்னதால் ஈழம் பற்றி அநேகர் அறிந்து உள்ளனர் தெரியுமா?ஈழம் பற்றி நான் நோக்க ஆரம்பித்ததே அண்ணன் சீமானின் பேச்சுக்கு பின்னர்தான்.

நடிகர்கள் மோர் பந்தல் அமைக்க சொன்னால்,புத்தகம் விநோகிக்க சொன்னால் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும் போது அவர்கள் சொன்னால் இதை செய்யவும் கூட்டம் இருக்கும்.

இரண்டு படம் வெற்றி பெற்றுவிட்டால் அரசியலுக்கு வரநினைப்பது தவறு என சொல்வதும் ஆதங்கமே..மக்கள் பிரச்சனை என்ன என்று தெரியாமல் ஒருவன் அரசியலுக்கு வருவது தவறு என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?அதற்குரிய எந்த ஒரு தகுதியும் இல்லாமல் இருப்பது அறிவிலாமல் இருப்பது தானே?

ஒருவர் தான் சார்ந்து உள்ள தொழிலோ,வேறு தொழிலிலோ அடுத்த கட்டத்திற்கு நகர நினைப்பதில் தவறே இல்லை ..ஆனால் ஒரேடியாக தாவ நினைப்பது?

அவர் ஒன்று மக்களை அவமான படுத்தி கூறவில்லை.நீங்களே கொஞ்சம் யோசிக்கவும்..அவர் கூறி இருப்பதன் பொருட்டு நடிகர்கள் மக்களை இழி பிறவிகளாக எண்ணுகிறார்கள் என்பதே.

விஜய்,சிம்பு இன்ன பிற நடிகர்களின் படங்கள் குறித்த படங்கள் தரும் மனநிலை தாக்கம் குறித்து நாம் தெளிவாய் ஆராய்ந்தால் இழிபிறவியாய் யார் யாரை எண்ணுகிறார்கள் என்று தெரிந்துவிடும் தெளிவாய்.

நாங்கள் நாசமாய் போவதற்கு யாரும் காரணமாய் இல்லை.ஒருவேளை அவர்(மாதவராஜ்) நாசம் போய் இருப்பார் எனில் இப்படி ஒரு பதிவை அவர் எழுதி இருக்க மாட்டார்.பலர் நாசமாய் போய் கொண்டு இருப்பதற்கு இவர்கள் காரணமாய் உள்ளனர் என்பதற்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

கலை துறையை பொறுத்த அளவில் ரசனை என்பதை சமூக நலன் சார்ந்த கண்ணோட்டம் என கொள்ளலாம்.வினவு பதிந்த "பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி" வாசித்தால் கொஞ்சம் உங்களுக்கு புரியும் என நினைகிறேன்.

பனிரண்டு மணிநேரம் மில்லில் வேலை பார்ப்பவன் எத்தகைய படம் பார்பான் என்பது நீங்களோ,நானோ,நடிகனோ முடிவு செய்ய வேண்டிய விஷயம் அல்ல...ரசனைக்குரிய படங்கள் வந்தாலே போதும்.

குழந்தைகளுக்கென எத்துனை படங்கள் வந்து இருக்கும் தமிழில் இதுவரை?

படங்கள் குற்த்து விமர்சனங்கள் எழுதும் போது..இத்தகைய படங்கள் தரவேண்டும் என்று விமர்சிப்பதற்கும் உரிமை உண்டு அல்லவா?சனநாயக நாடு என்று கூறப்படும் நாடுதானே இது?

24 Mar 2009

வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -4(இறுதி)

வாசிக்க

நினைவுகள் -1

நினைவுகள் -2

நினைவுகள் -3

அதன் பிறகு வீடு முழுவதும் சேறுகளும் சகதிகளும் நிறைந்து இருந்த காரணத்தால் என்னை அருகில் உள்ள ஊரான சிவந்திபுரம் அனுப்பிவிட்டு ..(அங்கு என் அத்தான் வீட்டில் தங்கி இருந்தேன்) வீட்டை சீரமைக்கும் பணியில் என் ஈடுபட்டனர்.

என் தங்கை,தாய்,தந்தை எங்கு இருந்தார்கள் என நினைவில் இல்லை ..
அதன் பின்னர் மீண்டும் பள்ளிவந்த பிறகு பல்வேறு வெள்ளம் குறித்த கதைகள் அரங்கேறின ..

கட்டிகொண்டே இறந்து போன ஜோடி ,பிள்ளைகளை பரண் மீது ஏற்றிவைத்து இருந்த பெற்றோர் என அது நீண்டு கொண்டே சென்றது.

அன்று இவைகள் ஒன்றும் பெரிதாய் தெரியவில்லை .இன்று நினைவுகளில் கொண்டு வரும் போது ஒரு சொல்லனா துயரத்தையும் கூடவே கொணர்கிறது.

இறக்கும் போது ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை காட்டிலும் ..இயற்கை அணுவணுவாய் உங்கள் மரணத்தை கூறிகொண்டே கொலை செய்யும் போது எப்படித்தான் இருந்து இருக்கும் ?

ஐயப்பனுக்கும் அவன் அப்பாவுக்கும் இடையில் என்ன பேச்சு இருந்து இருக்கும்?

இல்லை கண்ணீர்களும் கதறல்களும் தான் இருந்து இருக்குமோ?

அவைகளுக்கு என்ன அர்த்தங்கள் இருக்கும்?


இது போல ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வெள்ளத்தின் நினைவுகளோடு எனில் கரையாமல் இருக்கின்றன.


வேறேதும் சொல்வதற்கு இல்லாமல் சிறு கண்ணீர் துளிகளுடன் என் அனுபவ பகிர்தலை முடிக்கிறேன்.

19 Mar 2009

டாக்டர் ஷாலினி,பிரபல பதிவர்களுக்கு வேண்டுகோள்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்தாகிவிட்டன.இன்று மதியம் தேர்வு முடிந்து மகிழ்ச்சியாக செல்லும் மாணவ,மாணவிகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது ..நானும் கடந்து வந்த நிமிடங்கள் தானே இவை.பத்தாம் வகுப்பு தேர்வும் முடிவுறும் விரைவில்..

இந்த மகிழ்ச்சியில் செல்லும் இவர்களில் சிலர்தான் தேர்வு முடிவுகளுக்கு பின்னர் தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.

இத்தகைய நிகழ்வுக்கு அடிப்படை காரணம் என்ன?தேர்வு முடிவுகளில் போது இவர்கள் எப்படி கையாள படவேண்டும்?தங்களை தேர்வு முடிவுகளுக்கு தயார் படுத்தி கொள்வது எவ்வாறு என்கிற ரீதியில் ஒரு பதிவை இடுமாறு அழைப்பு விடுக்கிறேன்.

டாக்டர் ஷாலினி அவர்களே உங்களிடம் இருந்து இது குறித்து ஒரு உளவியல் ரீதியான பதிவை எதிர்நோக்குகிறேன்.நீங்கள் பதிவு செய்து இருப்பின் "மீள் பதிவு" செய்ய கேட்டு கொள்கிறேன்.

என்னாலும் எழுத இயலும் ஆகினும் முழுவதுமாக பயனுள்ள பதிவாய் சென்றடைய வேண்டும் என்பதால் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

தாமிரா,மாதவராஜ் மற்றும் கார்க்கி அவர்களே உங்களை குறிப்பிட்டு அழைக்கிறேன்.

****(பிற்சேர்க்கை)****

இதில் ச்சின்னப்பையன்,வால்பையன்,அப்பாவி,வெட்டிப்பயல்,செந்தழல் ரவி,பழமைபேசி,பரிசல்காரன்,ஆளவந்தான்,ஆதவா என பலரும் அடக்கம் ....உங்களில் ஒருவரேனும் ஏற்பீர்கள் என்ற நம்பிகயிலயே இந்த பதிவு இடப்பட்டு உள்ளது(இந்த பினூட்டத்தை பதிவிலும் சேர்த்து விடுகிறேன் விரைவில்)

என்னுடன் பேசியது பேயா?-நேர்ந்த நிகழ்வும் சந்தேகமும்.

சரியாக திங்கள் கிழமை(16/03/2009) காலை 4.30 மணி அளவில் அறைக்கு வந்து சேர்ந்தேன்.(ஒரு சிறு வேலையாக வெளியில் போய் இருந்தேனுங்க)

வந்தது அதிகபடியான அலுப்பு இருக்கவும் படுத்துகொண்டேன்.ஒரு பத்து நிமிடங்கள் தான் இருக்கும்..

தெளிவாக எனது இரண்டு புறமும் ..காலில் கொலுசுகள் அணிந்த படி யாரோ ஓடுவதுபோல உணர்ந்தேன்.ஆனால் என்னால் சற்றும் அசையமுடியவில்லை .மிகுந்த கஷ்டத்திற்கு பிறகு அசைய இயன்றது.

முழித்து பார்த்தல் யாரும் இல்லை.எனக்கோ பயம் தொற்றிகொண்டது.இப்பொழு நான் தங்கி இருக்கும் வீடானது 7 வருடங்கள் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.

காரணம் ,ஏழுவருடங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு பெண் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தாளாம்.

அந்த நினைவு வரவே பயம் இன்னும் தொற்றிகொண்டது..ஆக என் அருகில் இருந்த "பாலாவின்" பக்கம் திரும்பி படுத்து கொண்டு அவனது கையின் மிக அருகில் என் கையை வைத்துக்கொண்டு தூங்கலானான்.

மீண்டும் அதே சப்தம் ..அதே போல யாரோ ஓடுகின்ற சப்தம்...சரி பாலாவை எழுப்பலாம் என என் கையை அசைத்துபார்த்தால் இயலவில்லை.இத்தனைக்கும் அவனது கை மிக அருகில்...சில நேர போராட்டத்திற்கு பின்னர் சற்று அசைக்க முடிந்தது ..ஆனால் இப்போது சப்தங்கள் இல்லை.

பயம் மேலும் அதிகரிக்கவே பாலாவை எழுப்பவா என யோசித்து பின்னர் வேண்டாம் என முடிவு செய்தேன்.சரி இம்முறை சிறிது நேரம் கண்ணை திறந்து கொண்டு இருப்போம் என முடிவு செய்து படுத்தேன்.

இந்தமுறை கண்ணை திறந்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண் என் காதில் வந்து ஏதோ பேசுவது போல உணர்ந்தேன் ...நிச்சயமாக நான் உணர்ந்தேன்.ஆனால் என்ன பேசினாள் எனபது எனக்கு தெளிவாய் இல்லை.

அதற்க்கு பின்னர் தூங்க வேண்டாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் எழுந்து அமர்ந்து விட்டு ..காலை ராஜேஷ் முழித்த பிறகு நான் தூங்கலாநேன்.

யாரேனும் இப்படி அனுபவ பட்டது உண்டா?

இது நடந்ததுங்கோ..மேற்படி உங்கள் தகவலுக்கு ..எனக்கு பேய்,கடவுள் இரண்டு நம்பிக்கையும் கிடையாது ..ஆனால் இப்படி நிகழ்ந்ததுக்கு என்ன காரணம்??????

வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -3

படிக்க:

பகுதி ஒன்று

பகுதி இரண்டு

தெம்பளிக்கும்
சில வார்த்தைகளுக்கு பின்னர் என்னை பாலத்தின்(?!) மீது அமர்த்தினார் என் அப்பா..உயிரை பணயம் வைத்து செய்யவேண்டிய பயணத்திற்கு என்னை அனுப்பும் முன்னர் எப்படித்தான் இருந்து இருக்கும் அவரின் மனநிலை?

முதல் முறை,இரண்டாம் முறை என இரண்டு முறை இடறல்கள்,முன்றாம் முறை ஏறக்குறைய விழுந்தே விட்டேன் என்றுதான் நினைதேன் ..ஏதோ அனிச்சை செயலாய் சவுக்கு கம்பை கட்டிகொண்டேன்.

முழுவதும் கடக்கும் முன்னர் மாமா என்னை முன்வந்து தூக்கி கொண்டார்.என்னை அடுத்து அம்மா,தங்கையோடு அப்பா என கடந்து வந்தனர்.ஆச்சியும்,தாத்தாவும் வந்ததாக நினைவில் இல்லை.

பின்னர் மாமாவீட்டின் தண்ணீர் தொட்டி தண்ணீர் முழுவதுமாக இறக்கப்பட்டு,எல்லோரும் தற்காலிகமாய் அதில் குடியேறினோம்.

தண்ணீர் அளவோ குறைந்தாபாடு இல்லை...

வேளாங்கண்ணி மாதாவிடம் வேண்டுதல்கள் ஆரம்பமாகின..நானும் அவர்களோடு வேண்டிகொண்டேன்.

அப்பாவும்,மாமாவும் நீர் மட்டத்தை கண்காணித்து வந்தனர்.

சில மணித்துளிகளுக்கு பிறகு தூரத்தில் இருந்து குரல்மட்டும் ஒலித்தது .."காப்பாத்துங்கள்..காப்பாத்துங்கள்" என்று...

அப்பாவும் மாமாவும் சொல்லிகொண்டனர் "பரமசிவம் ஆசிரியர் என்று.என் அப்பாவுடனும் ,மாமாவுடனும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அவர்.

அவரை காப்பாற்ற எந்த வித வழியும் இல்லாமால் அவரின் மரண ஓலத்தை கேட்டுக்கொண்டு இருந்த அப்பா,மாமா மற்றும் அவரை அறிந்த எங்கள் பகுதியை சேர்ந்த மற்றவர்களின் மனநிலை தான் எப்படி இருந்து இருக்கும்?

கடைசிவரை உயிரை காக்க கத்தி கத்தி கதறி,விரும்பாதவன்னம் தானும் தன்னோடு தன் குடும்பத்தையும் சேர்ந்து மரணம் அரவணைத்துக்கொண்ட கடைசி நிமிடங்கள் தான் எப்படி இருந்திருக்கும்?

என் நண்பன் "ஐயப்பனும்" அவர்களுள் ஒருவனாய் இருந்தானே..ஐயப்பன் பரமசிவம் ஆசிரியரின் மகன்.அன்று மாலையில் எனக்கு பேய்கதை சொன்ன ஐயப்பன்.

ஒரு இரவில் எல்லாம் முடிந்தது...காலையில் தண்ணீர் இடுப்பளவு என்ற அளவில் வடிந்தது.

மாரி அண்ணன் வீட்டில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட "மலைபாம்புகள்" இரண்டு சன்னலோடு தங்களை பிணைத்து இருந்தன.

யாருக்கும் இல்லாமல் தோசைகளும்,சப்பாத்திகளும்,மர பொருட்களும் மிதந்து கொண்டு இருந்தன.அப்பா என்னை முதுகில் அமர்த்தி மேடான சாலைக்கு என்னை கடத்தி கொண்டுவந்து சேர்த்தார்.

என் மீன் படம் போட்ட நோட்டு சகதியோடு ஐக்கியம் ஆகி இருந்தது..

குறிப்பு : வெள்ளத்திற்கு பின்பான சிறிய நினைவுகளுடன் அடுத்த பகுதியில் நிறைவு செய்கிறேன் கட்டுரையை.

18 Mar 2009

அவளால் வாழ்ந்தவன் - அவள் யார்?

ஏதும் செய்ய விரும்பாமல் நடுமுற்றத்தில் அமர்ந்து,
நாட்காட்டியில் நாட்களை அசைபோடுகிறேன்,
எனக்கு அவள்மேலே விருப்பொன்றும் இல்லை,
அவ்வண்ணமே வெறுப்பும் இருந்ததில்லை,
ஏதோ அவளால் நான் வாழ்ந்துவந்தேன்,
இல்லை இல்லை நானும் வாழ்ந்தேன்.

இன்று அவளால் விரும்பப்படுபவனாய் நானில்லை,
என்னவோ உடம்பு சரிஇல்லையாம் அவளுக்கு.
அவளால் "பெரிதும் வாழ்பவனுக்கு" பாதிப்பாம்,
என்னை தள்ளி வைத்துவிட்டாள் வேண்டாமென.

அவ்வாறே நாட்காட்டிகளை முன்னோக்குகிறேன்,
அவ்வண்ணமே வேறேவளுக்கும் என்னை பிடிக்குமா?

உங்களைத்தான் அழைக்கிறார் நமீதா..

ஒரு முறையும் பதிவுகளை எழுதும் போதும் அநேகர் நாம் பதிவை வாசிக்க வேண்டும் என்கிற ஆசை எழாமல் இல்லை.அவ்வாறு பலபேர் நம்மை தேடிவரவே "வலைப்பூ திரட்டிகளில்" இணைகிறோம்.

ஒருவேளை திரட்டிகள் ஏதோ தொழில் நுட்ப கோளாறின் காரணமாக நமது பதிவை காட்டாமல் போய்விட்டால்?

அப்படி நடக்கவே இப்படி ஒரு எண்ணம் தோன்றியது. இதற்கு பெயர் "குறை தீர்ப்பி" பதிவு..(எதோ என்னால முடிந்தது)

தமிழ்மணத்தில் எனது ஒரு பதிவுகள் இதுவரை முகப்பில் காட்டப்படாமல் போனது அந்த குறையை தீர்க்கவே இந்த பதிவு..

காட்டப்படாமல் போன பதிவு


வாசிக்க தலைப்பின் மேலே சொடுக்கவும்.

மன்னிக்கவும்: "நமிதா" பேரை தலைப்பில் போட்டா கூட்டம் கூடும் அப்படின்னு சொன்னார்கள்.

வெள்ளத்தில் கரையாதது நினைவுகள் -2


முதல் பகுதியை படிக்க...

என்றும் இல்லாதபடிக்கு அதிகப்படியான கலவரம் அப்பாவின் முகத்தில் ....வார்த்தைகள் அம்மாவை நோக்கி ....ஒவ்வொரு நொடிக்கும் கதவின் அடித்துவாரத்தில் வந்து நிறையும் தண்ணீரின் அளவு கூடுவது நன்றாகவே தெரிந்தது .

இறுதியாக சாவி கிடைத்தது..கதவு திறந்தவுடன் கதவை முட்டிக்கொன்று இருந்த தண்ணீர் சரேல் என்ன உள்ளே பாய நிலைகுலைந்து தான் போனேன் ..நல்லவேளை வெளிப்புறத்தில் தண்ணீர் இடுப்பளவே இருந்த காரணத்தால் அதிகப்படியான விசை இல்லை.

கதவில் இருந்து வலது புறம் இருக்கும் மாடியின் படிகட்டை நோக்கி நாங்கள் நகர்த்தல் ஆனோம்.தங்கை யார் கையில் இருந்தாள் என்பது நினைவு இல்லை ..நான் அப்பாவிற்கு பின்னர் கடைசியாக படிகளில் ஏறினேன்.

இரண்டாவது படியில் இருந்த தண்ணீர் நான் நான்காம் படிக்கு செல்லும் முன்னர் மூன்றாம் படியை நிரப்பி இருந்தது ...

படிகளில் சற்று பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு ஆரோக்கிய அருள்ராஜ் மாமாவின் வீட்டு சன்னலை நோக்கி அப்பா கத்தலானார்.சிறிது நேரத்திற்கு பின்னர் பதில் வரவே அவர்களும் விரைவில் வெளிவரலானார்கள்.ஜானுக்கு என்னைவிட இருவயது குறைவு,செசிலுக்கு என் தங்கையின் வயது .

மாடிவந்த பிறகுதான் வடக்கு வீட்டு நினைவு வந்தது ..அப்பாவும் ,மாமாவும் கத்தலானார்கள் ..வெகு நேரத்திற்கு பின்னர் சுடலையாண்டி மாமா வீட்டில் இருப்பதாக பதில் வந்தது.

இடைப்பட்ட நேரத்தில் சவரிமுத்து மாமாவிற்கு சொல்லி ..ஷர்மியும்,பாஸ்டின் அண்ணாவும் நீந்தி வந்து படியேருவதை காண முடிந்தது ..ஜெயராசுக்கோ அப்போது வயது ஒன்று தான் இருந்து இருக்கும்(சரியாக நினைவு இல்லை)

எழுத்துக்களில் இவைகள் எளிதாக தோன்றலாம்..ஆனால் இருளிலும் தெரிந்த அந்த கலங்கிய தண்ணீர் பலரின் மனதில் பயத்தை கொண்டுவந்து இருந்தது.

ஓரளவு பாதுகாப்பாக இருந்த போதும் முழுவதுமான பாதுகாப்பை உணர இயலவில்லை.மாறாக தண்ணீர் மட்டம் முழவதும் வீட்டை விழுங்க கூடும் என்று மற்றும் உணர்ந்தோம்.

ஆகவே மொத்தமாய் அரோக்கிய அருள்ராஜ் மாமாவின் வீட்டில் நான்கு தூண்கள் வைத்து கட்ட பட்டு இருந்த உயரமான தண்ணீர் தொட்டிக்கு மாறுவது என முடிவு செய்தோம்.

சவரிமுத்து மாமா வீட்டில் இருந்து எங்கும் நகர்வது சாத்தியமற்றதாக இருந்தது.

எங்கள் வீட்டில் இருந்து மாமா வீட்டிற்கு உள்ள பத்தடி இடைவெளியானது இரண்டு சவுக்கு கம்பு பாலம் கொண்டு இணைக்க பட்டது.

முதல் ஆளாக நான் பாலத்தில் பயணமானேன்...உருண்டை வடிவிலான சவுக்கு கம்பு உருண்டுவிடாமல் இந்தப்புறம் அப்பாவும் அந்தபுறம் மாமாவும் பிடித்துக்கொள்ள ..பதினைந்து அடிக்கும் மேலான தண்ணீர் மட்டத்தில் மேலான ஒரு குறுகிய பாலத்தில் ..ஏழு வயது சிறுவனான எனது சவாலான பயணம் தொடங்கியது

குறிப்பு: இரண்டு பகுதிகளில் முடிக்கவேண்டும் என நினைத்தேன் ..முடியவில்லை வெள்ளத்திற்கு பிந்தைய நினைவுகளுடன் இன்னும் சில பகுதிகளாய் தருகிறேன்.

17 Mar 2009

வெள்ளத்தில் கரையாதது.... நினைவுகள் -1

இது என் வாழ்வின் சொந்த அனுபவம்.எனது ஏழு வயதின் போது தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை சந்தித்த அனுபவம்.ஒரே கட்டுரையில் முடிக்க இயலும் எனினும் இரண்டு கட்டுரையாக தருகிறேன்.

1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மின்சாரமில்லா அந்த இரவில் இருந்து இன்றுவரை என் நினைவில் அழியாத வண்ணம் இருக்கும் நினைவுகளுக்கான பயணம் ஆரம்பமானது.

ஒரு மெழுவர்த்தி வெளிச்சத்தில் அம்மா சுட்டு தந்த தோசை உடன் ...ரேடியோ பொட்டி "தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்" என்ற செய்தியோடு அணைக்க பட்டது.தோசைகள் இறங்கிய பின்னர் ..

வழக்கம் போல ஒரு இரவாகவே இருக்கும் என்ற எண்ணத்தோடு ..புதிதாய் வாங்கிய "மீன் படம்" இட்ட புதிய நோட்டை அலமாரியில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கைக்கு சென்றேன்.

நள்ளிரவு நேரம் ..சிறுநீர் கழிக்கும் அவசரம் "அப்பா ஒன்னுக்கு வருது" ..இருளின் பயத்தை போக்க அப்பா துணைக்கு வருவதாய் சொன்னவுடன் ..சலசலக்கும் நீரில் என் சிறு பாதம் பதிந்தது.

"அப்பா தண்ணியா இருக்கு" ..

சமையலறையில் தரையில் படுத்து இருக்கும் ஆச்சிக்கு எப்படி தெரியவில்லை என்ற படபடப்புடன் பரபரக்க ஆரம்பித்தது எங்கள் வீடு ..

ஏனோ தெரியவில்லை முட்டிக்கொண்டு இருந்த சிறுநீர் எங்கே போனதென்று ..

தலையணைக்கு அடியில் வைத்து இருந்த வீட்டு சாவியோ காணவில்லை.உயிரின் பயம் என்னை ஆட்கொண்ட தருணம் அது ..கண்டிப்பாய் இருந்த அனைவரையும் ...இரண்டு வயது குழந்தையாம் என் தங்கையை தவிர..

ஒரு சப்தத்தில் அனைவரும் முளித்துகொண்ட தருணம்... வயதான என் தாத்தா,ஆச்சி,அப்பா,அம்மா, மற்றும் நான் என வார்த்தைகளால் விளக்க முடியாத எண்ணத்தில் உழன்ற நிமிடங்கள் அவை.."சொல்லி தெரிவது இல்லை மன்மதக்கலை" ..ஆம் அது போலவே "சொல்லி தெரிவது இல்லை மரண பயமும்"

மாதம் முழுவதும் பெய்த மழையில்,நிறைத்து வழியதுடித்த அணைகட்டாம் "காரையாறு" அணைக்கட்டில் திறப்பானை திறவ இயலாமல் ..மிதந்து வந்த மரம் அடைத்ததால் வந்த துடிப்புகள் இவை..

இருக்கும் எதன் மதிப்பும் தெரிவதில்லை அதை நாம் இழக்கும் வரை ....அன்றைய மாலையில் பள்ளியில் "பேய்கதை சொன்ன" நண்பன் ஐயப்பனை "பேயாக்கி விட்டு" சென்ற இரவு வெள்ளம் அது ....

(தொடரும்..)

16 Mar 2009

திரைப்படமும் நிறப்பிரிகையும்

வெகு சில நாட்களுக்கு முன்னர் எனது அக்கா குழந்தையை,வீட்டில் உள்ள குட்டி நாயுடன் நடத்தி கூட்டி சென்ற போது ..L.K.G படிக்கும் எனது அக்காள் மகள் எதிர் வீட்டில் இருக்கும் அவள் வயதை ஒத்த குழந்தையை பார்த்து சொன்னது "கருப்பு பாப்பா" ....

சட்டென ஒரு உணர்ச்சி தோன்றி மறைந்தது.எனது அக்காள் மகளை நான் கடிந்து கொண்டேன் அவ்வாறு கூற கூடாது என.

இது எங்கிருந்து வந்தது?யோசித்தபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது திரைப்படம்.சராரியாக திரைப்படம் பார்க்கும் கூட்டத்தை சார்ந்தவன் தான் நான் எனினும் எனக்கு பெரிதாய் ஒன்றும் விருப்பு இருந்ததில்லை ..அதிகமாக வெறுப்புதான் தமிழ் திரைப்படங்கள் மீது.ஒருவேளை நான் இப்படி எழுத அதுகூட காரணமாய் இருக்கலாம்.

அனைத்து கதாநாயகிகளும் வெள்ளையாய் தான் இருக்கிறார்கள்,மாநிறத்தில் கூட கதாநாயகிகளை கண்டு பிடிக்க முடிவது இல்லை.ரோஜா கூட கருப்பாய் இருந்து கலராய் மாறி விட்டார்.இப்போது பழைய கருப்பு நாயகர்கள் தவிர கதாநாயகர்கள் கூட கருப்பாய் வருவது இல்லை.

படிப்படியாக இதை யோசிக்கையில் அடுத்தபடியாக மூளைக்குள் தோன்றிய பெயர் "கவுண்டமணி".அவர் தெரிந்து செய்தாரோ, இல்லை தெரியாமல் செய்தாரோ ..கருப்பு நிறத்தின் மீதான வெறுப்பை உமிழ்ந்ததில் அவரின் பங்கு கணிசம்.

அப்படியே அப்பரிக்கா மீதும் கூட அவருக்கு என்ன வெறுப்போ?இதை கவுண்டமணி அவர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக கொள்ளவேண்டாம் ..வெகு ஜன ஊடகமான திரைப்படத்தில் என்னோட மூளைக்கு எட்டியவர் அவர் அவ்வளவே ...

பெரும்பாலான படங்களில் அவர் கூறும் வசனங்களில் "கரிச்சட்டி தலையா","கருவாயா","ஆப்ரிக்கா மண்டையா" மற்றும் "அப்ப்ரிகா காட்டுக்குள்ள புறக்க வேண்டியவன் எல்லாம் இங்க பொறந்து ஏண்டா என் உயிரை வாங்குறீங்க"...எப்படியாவது வந்து விடும்.

உண்மையில் சிறந்த நகைச்சுவை நடிகரான அவர் சில முறைகளே இதை சொல்லி இருக்க கூடும் ..ஆனால் இன்றளவும் அது சென்றடைந்து இதுக்கும் பரப்பளவு விசாலமானது.

வெகு முன்னர் "சங்கர்" அவர்களும் சிவாஜி படத்தில் அங்கவை,சங்கவை கதாபத்திரங்களில் இதையே செய்து இருந்தார்."ஐஸ்வர்யா ராயை" பிடிக்கும் பலருக்கும் "நந்திதாதாஸ்" ஐ பிடிப்பது இல்லை ...

இந்த கருப்பின் மீதான திரைப்படம் பூசும் இந்த வெறுப்பு என்றேனும் அடங்குமா?

குறிப்பு : திரை ஊடகத்தில் பலரும் இந்த கருப்பின் மீதான வெறுப்பை உமிழ்ந்து இருக்கலாம் ..எழுதவேணும் என தோன்றிய உடன் என் சிறிய மூளைக்கு எட்டியது இவ்வளவே.

வாஞ்சிநாதன் வரலாற்று பிழையா?

கார்த்திகை பாண்டியன்(பொன்னியின் செல்வன்) அவர்களின் "எனக்கு பிடித்தவர்கள்" பதிவை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது.தனக்கு பிடித்தவராக அவர் "வாஞ்சிநாதனை" குறிப்பிட்டு இருந்தார்.

அவருக்காக "அருந்ததியர் வாழும் வரலாறு" புத்தகத்தில் மாற்கு அவர்கள் பதிவு செய்து இருந்ததை "புரட்சியாளர் பெரியார்" என்ற வலைப்பூவில் இருந்து இங்கே மீள்பதிவு செய்கிறேன் ...சம்பந்தம் உடையோர் கோபித்து கொள்ள வேண்டாம்.
எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம். ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர். ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது. வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு, R. வாஞ்சி ஜயர்.


ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

14 Mar 2009

செக்கடிகுப்பம் காணொளி காட்சிகள்(வீடியோ)

செக்கடிகுப்பம் காணொளி காட்சிகள் உங்கள் பார்வைக்காக

இவைகள் அனைத்தும் உலக தமிழ் மக்கள் அரங்கத்தின் சார்பாக செக்கடி குப்பத்தில் உள்ள பள்ளிக்கு மேற்கூரை கட்ட நன்கொடை அளிக்க சென்ற போது எடுத்த காணொளி காட்சிகள்.


காட்சி 1 -கோலாட்டம்


காட்சி 2 -சிலம்பம்


காட்சி 3-சிலம்பம்

காட்சி 4-சிலம்பம்(அரங்க தோழர்கள்)

காட்சி 5-சிலம்பம்

13 Mar 2009

பயமுறுத்தும் நாய்களிடம் கேட்க விரும்பும் 11 கேள்விகள்......

1)இரவெல்லாம் கூட்டமா தெரியும் நீங்க பகல்ல எங்க இருக்கீங்க?

2)பதினோரு மணிக்கு மேல பைக்குல போறவன தொரத்துறது பொழுதுபோக்கா?தொழிலா?

3)தெருவுக்கு தெரு கூட்டம் கூட்டமா இருகீங்களே ..உங்களுக்கு உள்ள சாதி பிரிவினையா?

4)உங்களுக்குனு சங்கங்கள் எல்லாம் இருக்காமே?

5)அதெப்படி திருடன்களை மட்டும் விட்டுருவீங்களா,திருடர்கள் துரத்தப்படுவது எங்களுக்குத்தான் தெரியலியா?

6)சைக்கோ கொலையாளி உங்க கூடத்தான் படுத்து தூங்குவானமே?

7)நீங்க பல்லை காட்டும் போது எச்சில் வருவது ஏன்?

8)வருசா வருஷம் உங்கள மாநகாராட்சி ஊழியர் புடிக்க வரப்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

9)உங்களுக்கு போஸ்ட் கம்பத்தை பார்த்தா "சிறுநீர்" கழிக்க யார் சொல்லி கொடுத்தா?

10)பதிவர் எல்லாம் 18+ ஆக இருந்தாலும்,எங்க அப்பாவும் படிப்பதால் ..எனக்கு மார்கழி குளுரு தெரியுறது இல்லை .

11) இப்படி மொக்கையே இல்லாமல் மொக்கைதனமா பதிவுபோட நீங்கள் உதவுவதை என்ன நினைகிறீர்கள்?

11 Mar 2009

"வெந்தயம்"..ஒரு ஈ அடிச்சான் காப்பி

குறிப்பு : அட சில நல்ல விசயத்தை வெட்டி ஒட்டுனா தப்பு இல்லைன்னு தோனுச்சு ..அதான் வெட்டி ஒட்டிடேன் .

நன்றி : பாத்திமுத்து சித்தீக்

வெந்தயத்தில் தாவர சாஸ்திரப் பெயர் ட்ரைகோ நெல்லாஃபீனம் கிரேக்கம் (trigonella foerum graecum) என்பதாகும். ஃபீனம் கிரேக்கம் என்றால் கிரேக்க நாட்டு வைக்கோல் என்றும் ட்ரைகோனல் என்றால் முக்கோணம் என்றும் பொருள். காய்ந்த வைக்கோலைப் போன்ற வாசனையும் கால்நடைகளுக்கும் உணவாகப் போட கிரேக்க நாட்டிலிருந்து தருவித்துக் கொண்டிருந்தார்கள். ரோம் நாட்டவர்கள், இதன் வெண்ணிறப் பூக்கள் முக்கோண வடிவமுடையதாக இருக்கும். இதுவே இதன் பெயர்க்காரணமாக அமைந்திருக்கலாம்.

பிறப்பிடம்

ஆசிய நாட்டினராலும், மத்திய தரைக்கடல் நாட்டினராலும் பெரிதும் விரும்பி உணவாகவும், மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படும். இதன் பிறப்பிடம் கிழக்கு ஐரோப்பாகவோ, எத்தியோப்பியாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் மேலை நாட்டவருக்கு இதன் மணம் பிடிக்காமலிருந்தாலும் காலப்போக்கில் மூலிகையாக பயிரிட்டு வந்துள்ளனர். வெந்தயத்தின் துளிர் இலைகளை கீரைபோன்றும் முதிர்ச்சியடைந்த விதைகளை மசாலாப் பொருளாகவும் உபயோகிக்கிறோம்.

வெந்தயக்கீரை

கீரை வகைகளில் மிகவும் குளுமையான வெந்தயக்கீரை, தாராளமாக சூரிய வெளிச்சமும், தண்ணீரும் கிடைக்குமிடத்தில் செழித்து வளரும். வருடா வருடம் விதைத்து வளர்க்கும் இந்த மூலிகைக் கீரை அதிக பட்சம் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரும்.

உடலை ஆரோக்கியமாகவும் வயிற்றை சுத்தமாகவும் வைக்கும் வெந்தயக்கீரையில் உலக சுகாதாரக் கழகத்தின் (றாடி) கணிப்புப்படி இதன் புரதச் சத்தின் அளவு 65. நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இந்த அளவு வெந்தயக்கீரை 49 கலோரிச்சத்து தருகிறது.

வெந்தயக்கீரையோடு, பாசிப்பருப்பைச் சேர்த்து உண்பதால் கல்லீரல் பலப்படுகிறது. வாய் வேக்காடு வராமல் காப்பாற்றுகிறது. பருப்பு சேர்த்து சுவையாகத் தயாரிக்கப்படும் வெந்தயக்கீரையை நெய்சேர்த்து சோற்றோடு பிசைந்து சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. உப்பு, புளி, காரம் சேர்த்து வெந்தயக்கீரையை தொக்காக்கி பல நாட்களுக்கு பயன்படுத்தலாம். பருவத்துக்கு வரக்கூடிய பெண்களின் ரத்தவிருத்திக்கு அவசியமானது.

வெந்தயக்கீரையில் விட்டமின் ஏயும், சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு... என்று அத்தனைக்கும் அருமருந்தாகிறது. இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.

சீஸனில் இந்தக் கீரையை நிறைய வாங்கி சுத்தப்படுத்தி, காயவைத்து, காற்றுபுகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொண்டு வருடம் முழுவதும் உபயோகிப்பதால் லைஸின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.

வெந்தயம்

வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.

வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.

தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம்.

மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப் போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது இழக்கும் தெம்பை மீட்க உதவும்.

நல்ல ருசியான உணவு தயாரிப்புகளின் வாசனை வந்தும்கூடி பசி கிளம்பாமலோ நாவில் ருசி மரத்துப் போயிருந்தாலோ கூட இதுவே மருந்து.

கணையம், கல்லீரல் வீக்கம், வயிற்றுப் போக்கு, அஜீரணம், நெஞ்சு எரிச்சல்... போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கும் வெந்தயம் ஒரு மாமருந்து. வயிற்றுக் கோளாறுக்கு மட்டுமல்லாது, வெந்தயநீர் காய்ச்சலையும் கட்டுப்படுத்தும். சிறுநீர்ப்போக்கை சீராக்கும்.

இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.

சமையலில்:

bullet தென்னிந்தியர்களின் சாம்பாருக்கு உபயோகிக்கும் மசாலாப் பொடியில் வெந்தயம் முக்கிய இடம் பெறுகிறது. சாம்பாரின் தூக்கலான வாசனைக்கு தூண்டுகோல் இதுவே. ஊறுகாய்களுக்கு உயிரூட்டும் வாசனையும் வெந்தயப் பொடியிலிருந்து தான். வங்காளிகளின் பாஞ்ச்ஃபோரன் எனும் ஐவகை மசாலாப் பொடியில் முக்கிய இடம் பெறுவதும் வெந்தயம்தான்.
bullet ஈரானியர்களிடையே பிரபலமாக உள்ள கோர்மே சப்ஜி காய்கறிகளை வேகவைத்து சாஸ் போன்று தயாரிக்கும் தயாரிப்பில் இடம்பெறும் மசாலாக்களில் ஒன்றாக இருக்கிறது.
bullet எத்தியோப்பியரின் மசாலாப் பொடியான பெரெபெரெயிலும் வெந்தயம் உண்டு.
bullet எகிப்து, எத்தியோப்பிய ரொட்டி தயாரிப்பிலும் வெந்தயப் பொடி இடம் பெறுகிறது.
bullet எகிப்தியரிடமும், மத்திய கிழக்கு நாட்டினரிடையே பிரபலமான பானம் ஹெல்பா என்பது. இது வெந்தயத்தை வேகவைத்த சாறில் சீனிபால் சேர்த்து பருகுவதாகும்.
bullet செயற்கை வெனிலா, செயற்கை மேப்பிள் சிரப் தயாரிப்புகளில் இடம் பெறுவதும் வெந்தயத்திலிருந்து எடுக்கப்படும் எஸ்ஸென்ஸ் தானாம்.

அழகுக் கலையில்

bullet பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்.
bullet அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
bullet பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.


10 Mar 2009

என்னவள்,செருப்பு,காதல்

இது ஒரு காதல் கதை....இல்லை இல்லை காதல் நிஜம்.

என்னவளோ பட்டணத்தில் படித்தவள்.

வைகை ஆற்றின் பாசனம் பெரும் ஒருவயலின் வரப்பில் அவள் தவறி விழுந்ததால் தவறாமல் நிகழ்ந்தது எங்கள் சந்திப்பு.

"செருப்பிட்டு வரவேணாம் வயலில்" என உதிர்த்தேன் அறிவுரையை.அதுவே வினை ஆகுமா?ஆனதே ...

அதே வரப்பில் தேவதை போல பட்டுடுத்தி..இல்லாத இடுப்பில் குடத்துடனும்,வலக்கையில் செருப்புடனும் அவள் ...

பளீர் என ஒரு அரை வாங்கினேன் காதலை சொல்லி....

அதன் பிறகு ஆத்தங்கரை ஓரம்,பெரு வரப்பு, சிறு வரப்பு என மாறாத பருவகாலம் போல மாறாமல் விழுந்தது செருப்படி.கடைசியாக செருப்பும் பிய்ந்தது,காதலும் கனிந்தது....செருப்படி பட்ட இடம் எல்லாம் செவ்விதழ் பதிந்தது பின்பொரு காலம் ...

அப்படி ஒரு காலத்தில் தான் ..காதல் கனிய சொன்னேன்."கழிவுகளில் பட்ட உன் செருப்பு படும் இடம் அவ்வளவு சுவையோ,இதழ்கள் இதமாய்
மேய்கின்றனவே"
..........

"பளார்...."என் கடவாய் பல்லு....."
..........
அன்றும் அப்படித்தான்...

நானும் அவளும் காலாட நடந்து ஆத்தங்கரை செல்லலாம் என உரைத்தேன்..

சரி என்றாள் அவளும்,என்றும் நான் கொண்ட காதலோடு ...அவளின் விரல் பற்றி ஒருவர் நடக்கும் வரப்பில் இருவர் நடந்தோம்..

வந்தது அவள் முதல் முறை இடறிய இடம்..காதல் கனிய நான் உரைத்தேன் "இங்கு தான் இறக்கை இல்லா ஒருதேவதை சேற்றில் குளித்தால் என்று"

பளார் ....சொத்...இனி நான் குளிக்கவேண்டும்.
...............

பிறிதொருநாள் நடந்தது இது ..நேற்று இரவு வாங்கிய பளாரில் பிய்ந்தே போய்விட்டது செருப்பு ..

கொண்டகாதலில் கொஞ்சமும் இடறாமல் வாங்கி வந்து இருந்தேன் அவளுக்கென அழகாய் ஒரு உயரமான குதிங்கால் செருப்பு .

செருப்பை நன்றாய் பார்த்துவிட்டு கேட்டாள் என்னவள் "எனக்கு ஏன் இவளவு உயரமான செருப்பு"

முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு நான் சொன்னேன் "நீ உயரம் பத்தாமல் என்னை அடிக்க கஷ்ட படுகையில்..மனது கஷ்டமாய் இருக்குறது" என்று ..

முன்னால் நகர்ந்து வந்து வந்து கட்டி அனைத்து ...

"அய்யய்யோ கடிக்கிறா ..."

"புது செருப்பு பிஞ்சா மனசு கஷ்டமா இருக்கும்" பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொண்டாள்.

9 Mar 2009

காதல் செடி



வேர்கள் வியாபித்து,
இலைகள் பரப்பி,
மொட்டெல்லாம் பூத்துக்குலுங்கும்,
கிளையெல்லாம் முள்ளாய் குத்தும்.

5 Mar 2009

சமூகம் செய்யவிருக்கும் கொலைகள்....

விரைவில் சமூகம் சில ,பல கொலைகளை செய்ய இருக்கிறது ..சமூகத்தின் அங்கத்தினரான நாம் அந்த கொலைபலி விழாமல் எப்படி நம்மை பாதுகாக்க போகிறோம்?

கண்முன் விரிந்து படர்ந்து விருட்சம் போல நிற்கும் கேள்வி இது ..


ஆம் பரீட்சை வேறு நெருங்கி விட்டது ....சில மாத காலங்களுக்கு பின்னர் முடிவுகளும் வந்து விடும் ..அப்படியே வரிசையாய் சில நாட்களில் சமூகமும் சில பல கொலைகளை செய்துவிடும்.

எப்படி தடுக்க போகிறோம்?இந்த முறையாவது செய்தித்தாள்களில் இப்படி ஒரு செய்திகளை வராமல் செய்ய இயலுமா?

இது சென்ற வருட செய்தி

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த 5 மாணவ, மாணவிகள் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 84.4 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தேர்ச்சி அடை‌ந்தன‌ர். எஞ்சிய 15.6 ‌விழு‌க்காடு மாணவ‌ர்க‌ள் தோல்வி அடை‌ந்தன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காடாநல்லூரை சேர்ந்த கவுதமன் என்ற மாணவ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட‌ா‌ர்.

இதேபோ‌ல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவனு‌ம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யா என்ற மாணவியு‌ம், ‌திருப்பூரைச் சேர்ந்த ரூபினி என்ற மாணவியு‌ம், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ஊ‌ட்டியை சேர்ந்த கீதா என்ற மாணவியு‌ம் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளன‌ர்

செய்தி-வெபதுனியா

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது 14 பேர் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனக்கும் கற்பிதம் செய்ய பட்டு இருந்தது பத்தாம் வகுப்பு வாழ்வில் மிக முக்கியமான தருணம் ..இது இல்லை எனில் வாழ்கையே இல்லை.அடுத்து பனிரெண்டு ....அங்கயும் அப்படியே ..

இதில் எந்த அளவு உண்மை உள்ளது?இப்படி சொல்வதனால் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை தவிர்த்து,மன அழுத்தத்தையே கொடுக்கிறோம்.

இதற்க்கு என்ன மாற்று என்பது எனக்கு தெரியவில்லை.வருடாவருடம் வரும் பருவகாலம் போல ..செய்தி தாள்களுக்கு இது ஒரு பருவகால செய்தி ஆகி விட்டது .நமக்கும் கூட ....

ஒவ்வொரு வருடமும் கொலை பலி எனில் விழுகிறது .நானும் தப்பித்து கொண்டே இருக்கிறேன் .

என்று தணியுமோ இந்த சமூகத்தின் கொலைத்தாகம் ...

முடிந்த அளவு நம்மால் இயன்ற வரை ..பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவோம் .இது மட்டுமே வாழ்க்கை இல்லை என புரியவைப்போம் .

தற்கொலைக்கு எதிரான அமைப்புகள் குறித்து யாருக்கும் பெரிதாய் தெரிவதில்லை .அமைப்புகள் தங்களை விளம்பர படுத்திக்கொள்ள ஏன் தயங்குகின்றன என தெரியவில்லை ..

சென்னை வந்த பிறகுதான் எனக்கு இந்த அமைப்புகள் குறித்து தெரியும்.
அதிலும் "சிநேகா" மட்டுமே நான் விளம்பரம் வழி பார்த்தது ...

உயிர்களை காப்பாற்ற ஏதேனும் முயற்சி செய்யலாம் நாம்..