5 Jan 2009



49 'O' எனக்கு புரியவில்லை..


நான் முன்னரே கூறி இருப்பது போல "இது எனக்கான..இல்லை இல்லை .நமக்கான,நாம் கற்பதற்கான வெளி.பகிர்தல்..பகிர்வதன் மூலம் புரிதல்,புரியவைத்தல்".எனக்கு கடந்த வெகு சில நாட்களாக வந்த சந்தேகங்களை சில கேள்விகளாக உங்கள் முன்னர் வைக்கிறேன்.

முதலில் நானும் 49 'O' விற்கு வாக்களிப்பதாக முடிவு செய்தேன்.இது நேற்று தற்செயலாக எனது நண்படன் பேசி கொண்டு இருக்கையில் தோன்றியது.

கேள்விகளுக்கு முன்னர் எனக்கு என்ன புரிதல் 49 'O' குறித்து என்பதை சொல்லி விடுகிறேன்.

அதாவது 49 'O' எந்த கட்சிக்கும் எனக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை.நான் ஒட்டு இடாமல், எனது ஓட்டை எவனோ ஒருவன் அபகரிக்க விடாமல் செய்ய ஒரு வழிமுறை.

சரி எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

1) இதே முறை வேறு எங்கும் புழக்கத்தில் உள்ளதா?
2) ஒரு வேளை அதிக பெரும்பான்யை விட 49 'O' வின் ஒட்டு அதிகம் ஆகிவிட்டால்?
a) அதை ஜானநாயக முறை படி நடப்பதாக சொல்ல படும் இந்த தேர்தல் மேலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை என எடுத்து கொள்ளலாமா?
3) வெறும் கள்ள ஓட்டுகளை புறக்கணிப்பது தான் இதன் வேலையா?

வெறுமனே பார்க்கும் போது எனக்கும் கூட இந்த கேள்விகள் மேலே எனக்கு லயிப்பு இல்லை.ஒரு வேளை 49 '0' அதிகமாக இருக்கும் பொருட்டு..

1) எத்தனை நாள் தான் நாம எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என தேர்ந்து எடுத்து கொண்டு இருப்பது?
2 ) ஆள் பலம் பணபலம் கொண்டு செய்வது தான் ஆரசியல் என முத்திரை குத்த பட்டபிறகு ..வெறுமனே சண்டை வைத்து தேர்ந்து எடுத்து விடலாமே?இன்னும் ஏன் இப்படி நம்மை நாமே ஏமாற்றி கனவு காணும் வேலை?
3 ) இப்படியே தான் இருக்கும்.அவன் நமக்கு செயுரதே கொஞ்சம் செய்து கொண்டு ..அவனுக்கு வேண்டிய பணத்தை மட்டும் சுருட்டி கொள்வான் என எத்துணை காலத்திற்கு நம்புவது?

மீண்டும் சொல்கிறேன் இந்த கேள்வி ரொம்ப கேவலமா தெரியலாம் ..ஆனாலும் எனக்கு வாக்கு உரிமை வாக்கு உரிமை அப்படி ஒன்னு இருக்குன்னு சொல்லுறாங்களே அது என்ன *** என தெரிந்து கொள்ள ஒரு ஆசை அவ்வளவே.


மேலும் வாசிக்க .." 49 - O வை பயன் படுத்துங்கள் "

http://karuvarayilirunthu.blogspot.com/2009/01/49-o_06.html

No comments: