
பள்ளிகூட காலை விளையாட்டுகளால் எப்போதும் நிரம்பியே இருக்கும்.முடித்ததோ முடிக்காததோ வீட்டு பாடங்கள் எங்களை சஞ்சல படுத்தியதே இல்லை.எங்கள் புத்தக பை எங்கள் ஆசைகளை சுமந்து செல்ல "பெரிதாய் கொஞ்சமேனும்" இடம் வைத்தே இருந்தது.குண்டான க்ரேஸ் டீச்சரும்,ஒல்லியான சிரியபுஷ்பம் டீச்சரும் எப்போதும் பயம் கொடுத்ததே இல்லை.
அது எங்கள் ராஜியமாகவே இருந்தது.எங்களுகென கற்றலுக்கான பாதையும்,சுதந்திரமும் தெளிவாய் வடிவமைக்க பட்டு இருந்தன.நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.பாடங்கள் மட்டுமே கற்பிக்கபட்டன.உறவுகள் அனுபவிக்கபட்டன.கொய்யாவை காக்கா கடி கடித்து தரும் செந்திலாலும்,மிட்டாய் கொடுக்கும் புஷ்பாக்களாலும் அவைகள் வலு பெற்று இருந்தன.
மொத்தத்தில் அவை அழகிய பக்கங்களாய் இருந்தன.

இப்பொழுதும் காலை பொழுது விளையாட்டுகளால் தான் நிரம்பி உள்ளது .ஆனாலும் முடிகபட்டதோ, முடிக்கபடாததோ ,திணிக்கப்பட்ட வீட்டு பாடங்கள் மனதை சஞ்சல படுத்திகொண்டே இருக்கின்றன.புத்தகபை காற்றை கூட அனுமதிக்க இடம் இல்லாமல் தவிக்கிறது.ஆசிரியர்கள் எப்பொழுதும் கனவில் கம்புடனே வருகிறார்கள்.நேரிலும்..
எல்லாம் திணிப்பாகவே உள்ளது.சுதந்திரம் அவர்களுக்கு இருப்பதே இல்லை .பெரும்பாலும் அவர்கள் அவர்களுடைய அப்பாகளாகவோ,அம்மாக்களாகவோ இருகிறார்கள் .அவர்களின் பிஸ்கட்டுகள் பெரும்பாலும் அவர்கள் திண்பதற்காகவே படைக்க பட்டு இருக்கின்றன . உறவுகள் நூல் பாலமாகவே....
அழுக்காக ஆக்கப்பட்ட பக்கங்கள்..
6 comments:
nalla irukku subash
we all are waiting for more post from u
Well written...
nalla irukku subash
we all are waiting for more post from u //
நன்றி நிதி.
Well written..//
நன்றிகள் செல்வா
அடடா!எத்தனை ரசனை!எத்தனை வேதனை!!!
உங்கள் பதிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து எழுதவும்.
நன்றி சசி ரேகா அவர்களே...
Post a Comment