17 Feb 2009



கலாச்சாரம் ஏன் வேண்டும்?


எனது சென்ற பதிவாய் கலாச்சாரம் யாருக்கு மட்டும் என்பதை பதிந்து...அதன் மூலம் கலாச்சாரம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் பொதுவானது என்பதை மேற்கோள் காட்டும் விதமாய் முயற்சி செய்து இருந்தேன்.

இந்த பதிவில் எனது எண்ணப்படி ஏன் கலாச்சாரம் வேண்டும் என்பதை பற்றி ஆராய்ச்சிக்கு விழைகிறேன்.

ஒழுக்க நெறிமுறையே கலாச்சாரத்திற்கு ஆணிவேராக இருக்க இயலும்.கலாச்சாரம் என்பது ஒரு சமூகம் தனக்கான,தன் மக்களுக்கான .ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான ஒழுக்க கோட்பாட்டை கொண்டு இருப்பதே ஆகும்.

சரி எத்தகைய ஒழுக்க கோட்பாடு?
மன ஒழுக்கம்,செயல் ஒழுக்கம்,பேச்சு ஒழுக்கம்.

மன ஒழுக்கம்
தனிப்பட்ட மனிதர்கள் சம்பந்த பட்டதாகி விடுகிறது.மனதளவில் ஒருவன் ஒழுக்கமா இருக்கிறானா? இல்லையா? என்பது ஒரு போதும் தெரிய போவது இல்லை.ஆக இத பத்தி அதிகம் பேச வேண்டியது இல்லை.

பேச்சு ஒழுக்கம்
ரொம்ப முக்கியமானது ...ஆனால் ஒரு போதும் இதை நாம் கலாச்சார அங்கமாக பார்ப்பதே இல்லை.நம்ம தான் தினம் தினம் பார்த்து இருப்போமே...ஒரு நாளைக்கு சாலையில் போகும் போது ஒரே ஒரு கெட்ட வார்த்தையாவது கேட்டு விடுவோம்.

கடைசியா இப்ப அது ஒரு கலாச்சார வடிவம் பெற்று விட்டது.மதுரை பக்கம் பார்த்தீர்களானால் ...நட்புரீதியாக பேசிக்கொள்ளும் நண்பர்கள் கூட .."ஒத்தா" என்ற வார்த்தையை அழகாக(!?) பயன்படுத்துவார்கள்.

செயல் ஒழுக்கம்
இதுதான் இன்றைக்கு கலாச்சாரத்தின் வடிவமாய் பார்க்கப்படுகிறது.அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு.இன்னைக்கு இது என்ன சொல்லுதுனா...

ஆண்கள் குடிப்பது தப்பு.பெண்கள் குடித்தால் கலாச்சார மீறல்.

ஆண்கள் எப்படியும் உடை அணியலாம்.போது இடத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.பெண்கள் கெண்டை கால் தெரிந்தாலும் கலாச்சார மீறல்.

தேடிச்சென்று பெண்ணை புணர்தல் ஆணின் உரிமை.மனம் கவர்ந்தவனை காதலித்தாலே அது கலாச்சார மீறல்.

இப்ப தெரியுதோ செயல் ஒழுக்கம் யாருக்கு சொல்ல பட்டு இருக்குன்னு.

ஒழுகத்துகான நடுநிலை எண் 5 என கொள்வோமே ஆனால் இங்கு ஆண்களுக்கான ஒழுக்கம் 1 இருந்தால் போதும் எனவும் ..பெண்களுக்கு 9 இருக்க வேண்டும் எனவும் நம்ம கலாச்சார கட்டமைப்பு சொல்கிறது.

சரி எல்லாம் சரித்தான் ...எதுக்கு இந்த கலாச்சாரம்?

1)இந்த ஒழுக்க கலாச்சார கட்டமைப்பு இல்லை என்றால்,நமக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

2)வீட்டுக்கு எப்படி அஸ்திவாரம் போட்டு ,செங்கல்,சிமிண்டுன்னு தரமா பாத்து வீட்ட கட்டுகிறோமோ அதை மாதிரி இந்த ஒழுக்க கட்டமைப்பு.
ஒழுங்கா இல்லை என்றால் எல்லாம் கோவிந்தா.

ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் அப்படின்னு சொல்லை என்றால் அடிபிடி சண்டை வந்து ....உயிரிழப்பு தான் ஏற்படும்(இங்க கொஞ்சம் அதிகமா ஒருவனுக்கு பலவும்,கொஞ்சூண்டு ஒருத்திக்கு பலவும் இருக்கு)

சரி போன பதிவுல ராம் சேனாவுக்கு எதிரா பெண்ணுக்கு ஆதரவாய் எழுதினேன்..அப்ப இந்த பொண்ணுங்க பண்ணுனது சரியா?

இரண்டு வாக்கியங்களை நான் இங்கு மேற்க்கோள் காட்ட விரும்புகிறேன்.
Freedom is self resposible(தமிழ்ல தெரியலை)

உன்னுடைய உரிமை என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை மட்டுமே.

முதலில் உள்ளது உங்களுக்கு எளிதாய் புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
இரண்டாவது வாக்கியத்தை கொஞ்சம் நிகழ் கால நடப்புடன் சம்பந்த படுத்த விரும்புகிறேன்.

பெண்ணின் ஆடை,ஆணின் ஆடை என்பது அவர்கள் தனிப்பட்ட விஷயம் ஆகி விடுகிறது.ஆனாலும் பெண்ணின் ஆடை ஆண் தன்னை தூண்டுவதாயோ,ஆணின் ஆடை பெண்ணை தூண்டுவதாயோ அமையும் எனில் அது கேள்விக்கு உள்ளாக்க படவேண்டும்.

என்ன இது ஆணாதிக்க சமூகமாய் உள்ளது.ஆகையால் பெண்கள் மட்டுமே கேள்விக்கு உட்படுகிறார்கள்.

சினிமாவில் பெண்கள் அறைகுறையாய் ஆடினால் தான் தப்பு.அர்ஜுன்,ஆர்யா,சித்தார்த் ஆகியோர் உள்ளாடையுடன் காட்சி தருவது சரியே.(படத்திற்கு தேவை என்று சொல்வீர்களே எனில்,நான் பெண்ணின் ஆடை குறைப்பை ..ஆணாதிக்க சமூகத்தில் பட ஓட்டத்திற்கு தேவை என்று சொல்வேன்)

ஆக கலாச்சாரம் வேண்டும்..எப்படி?ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாய்...

இல்லை எனில் கலாச்சாரம் குறித்து பேசாது இருப்பீர்களாக.

No comments: