21 Oct 2009



வலைப்பதிவர்களே -எண்திசை பதிவு!!

ஒரு புதிய பதிவு வகையை எனது சிந்தனை கொண்டு அறிமுகபடுத்துவதில் பெருமிதம் அடைகிறேன்.

ஏற்கனவே தொடர்பதிவு என்று ஒன்று இருக்கிறது.இதன் படி ஒருவர் ஒரு பதிவை பதிய, அவர் அழைத்து அவரை தொடர்ந்து மற்றவர் பதிய வேண்டும். பின்பு அவர் அழைப்பில் மற்றொருவர் என தொடர்கிறது ..இது தான் நான் புரிந்து கொண்டு உள்ளது.

இதில் எனக்கு பெரும் குறையாக தோன்றியது அதை போன்ற பதிவை பதிய விரும்பும் ஒருவர் யாரேனும் அழைக்க வேண்டும் என காத்து இருக்க வேண்டி இருக்கிறது(அழைக்காமலும் பதியலாம் என்பது உண்மையே.அழைப்பின் கீழ் பதிகையில் பெரும்பான்மை வாசகர்களை கவர முடிகிறது)

மேலும் சில நேரம் நாம் தொடர்பதிவுக்கு அழைத்து யாரும் பதியாமல் போவதும் நடக்கிறது.

இதுபோக தொடர்பதிவுகள் ஓரளவு பிரபலாமாகி விட்டவர்களிடயே மட்டும் நடக்கிறது.

ஆக இந்த குறையை தீர்க்க யோசித்த போது எனக்கு இரண்டு வகை பதிவுகள் தோன்றின.

ஒன்று குறையை தீர்க்கும் வண்ணமும்,மற்றொன்று குறைகளுடனே ஆனால் புதிய தொரு வாய்ப்பை தரும் வண்ணமும் தோன்றின.

வட்டப்பதிவு: இது அப்படியே தொடர்பதிவை போலவே ..அழைப்பின் பேரிலேயே பதியப்பட வேண்டும்.ஏற்க்கனவே பதிந்தவரை மீண்டும் பதிய அழைக்கலாம்.

எண்திசைப்பதிவு: இதன் படி யாரும் அழைக்கப்பட வேண்டாம்.முதலில் பதிபவர் தனது பதிவில் எண்திசைப்பதிவு என்று "tags" இல் குறிப்பிட்டு இருந்தால் போதும்.யாரேனும் அதை தொடர்ந்து பதியலாம்.

தொடர்ந்து பதிபவர் யாரை தொடரகின்றாரோ அவரது வலையின் சுட்டியை தனது பதிவில் இடுவதுடன்,அவரை போலவே "tags" இல் எண்திசைப்பதிவு எனவும்,மேற்கொண்டு தொடர்ந்தவரின் வலைப்பூவின் தலைப்பையும் கொடுத்து விடல் வேண்டும்.

இதில் உள்ள நன்மைகள்

புதியவர்கள் பழையவர் என்ற பேதம் குறையும் என நம்புகிறேன்.

இன்னும் புதிய புதிய வலைபூக்களை படிக்கும் வாய்ப்பு அதிகருக்கும் .

இது குறித்த உங்கள் மேலான கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.

இன்று இரவு எனது முதல் எண்திசைப்பதிவு ஆரம்பம் ஆகும்.

2 comments:

Suresh Kumar said...

எண்திசை பதிவை துவங்க வாழ்த்துக்கள் . நல்ல்ல முயற்சி தொடருங்கள்

ஆண்ட்ரு சுபாசு said...

@Suresh Kumar

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா ...பின்னூட்டங்களே எனது பேனாவிற்கு மையாக உள்ளன.