1 Jan 2009



அழகான பக்கங்கள்

"ஊதா டவுசரும்,மை ஊரிய வெள்ளை சட்டையும் போட்டு ஒரு மஞ்சள் பையை தலைக்குமேல் சுமந்து கொண்டு..." பள்ளிக்கு செல்லும் எங்கள் பாதை பெரும்பாலும் இப்படி தான் இருக்கும்.கொஞ்சம் வசதி இருக்குமாயின் சதுர வடிவிலான தோள் பை.சட்டை பையை பெரும்பாலும் 10 பைசாவோ 5 பைசாவோ நிறைத்து இருக்கும்.கூடவே மனசில் சவ்வு மிட்டாய் தரும் தித்திப்பையும்.நடக்கும் போது லாவகமாக காற்றை பின்தள்ள துடுப்பென கைகள்.எந்த காலை பொழுதும் சோர்வாய் இருந்ததாய் நினைவே இல்லை.

பள்ளிகூட காலை விளையாட்டுகளால் எப்போதும் நிரம்பியே இருக்கும்.முடித்ததோ முடிக்காததோ வீட்டு பாடங்கள் எங்களை சஞ்சல படுத்தியதே இல்லை.எங்கள் புத்தக பை எங்கள் ஆசைகளை சுமந்து செல்ல "பெரிதாய் கொஞ்சமேனும்" இடம் வைத்தே இருந்தது.குண்டான க்ரேஸ் டீச்சரும்,ஒல்லியான சிரியபுஷ்பம் டீச்சரும் எப்போதும் பயம் கொடுத்ததே இல்லை.

அது எங்கள் ராஜியமாகவே இருந்தது.எங்களுகென கற்றலுக்கான பாதையும்,சுதந்திரமும் தெளிவாய் வடிவமைக்க பட்டு இருந்தன.நாங்கள் நாங்களாகவே இருந்தோம்.பாடங்கள் மட்டுமே கற்பிக்கபட்டன.உறவுகள் அனுபவிக்கபட்டன.கொய்யாவை காக்கா கடி கடித்து தரும் செந்திலாலும்,மிட்டாய் கொடுக்கும் புஷ்பாக்களாலும் அவைகள் வலு பெற்று இருந்தன.

மொத்தத்தில் அவை அழகிய பக்கங்களாய் இருந்தன.

மாறாக இன்று "கருப்பு நிற சூவும்,கழுத்தை இருக்கும் டையுமாய் ,முதுகை வளைக்கும் பையுடன் அழுத்தி வைக்க பட்ட மூட்டையாய்...." ஆட்டோவில் பள்ளிக்கான பாதை உள்ளது.ரூபாய் நோட்டுகளால் சட்டை பை நிறைந்து உள்ளது .காற்றை தள்ள கைகள் இருப்பது இல்லை மாறாய் தோளுக்கு துணையாய் பையை சுமந்து கொண்டு.

இப்பொழுதும் காலை பொழுது விளையாட்டுகளால் தான் நிரம்பி உள்ளது .ஆனாலும் முடிகபட்டதோ, முடிக்கபடாததோ ,திணிக்கப்பட்ட வீட்டு பாடங்கள் மனதை சஞ்சல படுத்திகொண்டே இருக்கின்றன.புத்தகபை காற்றை கூட அனுமதிக்க இடம் இல்லாமல் தவிக்கிறது.ஆசிரியர்கள் எப்பொழுதும் கனவில் கம்புடனே வருகிறார்கள்.நேரிலும்..

எல்லாம் திணிப்பாகவே உள்ளது.சுதந்திரம் அவர்களுக்கு இருப்பதே இல்லை .பெரும்பாலும் அவர்கள் அவர்களுடைய அப்பாகளாகவோ,அம்மாக்களாகவோ இருகிறார்கள் .அவர்களின் பிஸ்கட்டுகள் பெரும்பாலும் அவர்கள் திண்பதற்காகவே படைக்க பட்டு இருக்கின்றன . உறவுகள் நூல் பாலமாகவே....

அழுக்காக ஆக்கப்பட்ட பக்கங்கள்..

6 comments:

Anonymous said...

nalla irukku subash
we all are waiting for more post from u

Selva said...

Well written...

ஆண்ட்ரு சுபாசு said...

nalla irukku subash
we all are waiting for more post from u //

நன்றி நிதி.

ஆண்ட்ரு சுபாசு said...

Well written..//

நன்றிகள் செல்வா

Sasirekha Ramachandran said...

அடடா!எத்தனை ரசனை!எத்தனை வேதனை!!!

உங்கள் பதிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது.தொடர்ந்து எழுதவும்.

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி சசி ரேகா அவர்களே...