12 Feb 2009



கலாச்சாரம் யாருக்கு மட்டும்?


எந்த ஒரு நேர்த்திப்படுத்துதல் எண்ணமும் இல்லாமல் மனம் திறந்த ஓடையாகவே இந்த பதிவை எழுதுகிறேன்.எதிர்ப்புகளை எதிர் நோக்கியே.எதிர்ப்புகளை கொணரும் அளவுக்கு வீரியம் இருக்குமா என்பதை நான் அறியேன்.

இங்கு மனித மூளைகளை மட்டப்படுத்தி இருக்கும் பார்ப்பனிய கட்டமைப்பின் நீளமும்,அது வரையறுக்கும் கலாச்சாரத்தின் தன்மையும்,ஆணாதிக்க கையின் நீளமும் சொல்லி புரிய வைப்பது எளிதல்ல.

கலாசாரம் யாருக்கு மட்டும் என்பதன் பொருட்டு எத்தனை கேள்விகளை எழுப்பினாலும்.

"அதெப்படி" என ஒற்றை வார்த்தையில் அனாசியமாக தட்டி கழித்து விட்டு போகும் படிக்கு வளர்த்திருக்கிறது மக்களை.

பெண்ணியம் பேசும் போது பெரும்பாலும் தோற்றுப்போகும் இடம் அவர்களின் ஆடை நேர்த்தியாகவே இருக்கிறது.அவர்களின் ஆடைகளை அவர்களே தெரிவு செய்து கொள்ளும் உரிமைகள் அவர்களுக்கு உண்டென பேசிப்பார்ப்போமே ஆனால் ...இந்த பார்ப்பனிய கட்டமைப்பில் மூளை மங்கி போனவர்கள் "கற்பழிப்பை நியாயப்படுத்தும்" உரிமை போராட்டத்திற்கு இட்டுச்சென்று இடுவர்.

எனவே இதை ஒப்பிடுதல் முறையிலேயே பேசுவதுதான் உசித்தமாகும்.

"ஆணென்ன பெண்ணென்ன,நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்" இந்த தத்துவ சித்தாந்தங்களை எல்லாம் ராம் சேனா அமைபிற்கு கொடிபிடிப்பவர்களுக்கு ரசிக்க மட்டுமே தெரியும்.

ஒப்பிடுதல் கேள்விகளுக்கு வரும்முன்னர் ஒரு சிறு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் வருகைக்கு முன்னர் இருந்தே இங்கு 30 விழுக்காடு பெண்களுக்கு குடிப்பழக்கம் என்பது உண்டு.எனது தாத்தா பாட்டி காலத்தில் மார்பு கச்சை அணியும் பழக்கம் கிடையாது.

மங்களூரு சம்பவத்தில் ராம் சேனா அமைப்பின் செயலானது கலாச்சார காவல் செயல் என்பதை காட்டிலும்,ஆணாதிக்க நிலை நாட்டல் எனக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்.

பாதிக்க பட்ட பெண்களின் உடைகளை பற்றி பேசுபவர்களே,பாதிப்பை உள்ளாக்கியவர்கள் அணிந்து இருந்தது பாரம்பரிய உடையா?பெண்கள் பப்பிற்கு செல்லக்கூடாது என சொல்பவர்கள்.ஆண்கள் செல்வதை ஏன் பழிக்கவில்லை?

ஒழுக்கம் தான் கலாச்சாரத்தின் தூண் என்றால்..ஆண் என்றால் குடிப்பழக்கம் கொள்ளலாம் என்பது எத்தகைய நியாயம்??

ஒழுக்கம் மனதோடு சம்பந்த பட்டது என்றால்?பெண்களை பலவந்த படுத்தி புணரும் ஆண்வர்கதினரின் ஒழுக்கம் எத்தகைய கேள்விக்கு உரியது?

பேருந்து நிலையங்களில் பலர் பார்க்கும் பொருட்டு ..ஆண் குறியை வெளியே எடுத்து சிறுநீர் கழிப்பவர்களை தாங்கள் பார்த்தது இல்லையா?அவர்களின் மேலே ஏன் கலாச்சார காவல் பாயவில்லை?

குடித்து விட்டு நிர்வாணமாயும்,அலங்கோலமாயும் கிடக்கும் கலாச்சார ஆண்களுக்கு எதிரான கலாச்சார காவலின் நடவடிக்கை என்ன?

ராம் சேனா அமைப்பினால் கலாசார அமைப்பை வரையறுக்க இயலுமா?

மங்களூரு சம்பவத்தினை நியாயபடுத்த முனைபவர்களும்,அவர்கள் கூறும் கலாச்சார கோட்பாட்டை மட்டும் ஏற்றுகொள்பவர்களும் ஆண்களின் கலாசார கோட்பாடு என எதை கூறுவீர்கள்?

சரி இத்தகைய பப்புகளில் ஆண்களுக்கூடான சண்டையே அதிக அளவு இருக்கும் பொழுது,பெண்கள் மீதான இந்த வன்மையை மட்டும் இவ்வாறு படம் பிடித்ததன் நோக்கம் என்ன?

கேமரா கண்களும் "பெண்ணென்றால் போக பொருள் எனவும்,வியாபர பொருள் எனவும் எண்ணம் கொண்டுள்ளதோ?"

Men are from Mars,Women are from Venus என்று நேற்று ஒரு நண்பர் சொல்லி இருந்தார்.ஆக ஆண் அவன் பாரம்பரிய உடையை மாற்றி ஜீன்ஸ் உம் டி-ஷர்ட் உம் அணிய உரிமை உள்ள பொழுது பெண்ணுக்கு இல்லையா?

வேலைக்கும் செல்லும் ஆண் குடிக்கலாம் எனும் போது...வேலைக்கு செல்லும் பெண் குடிக்க கூடாதா?

ஒரு சீரழிவு கட்டமைப்பை(பார்ப்பனிய) வேரருப்பதை விட்டு விட்டு ,இத்தகைய செயல்களை புரிவது கேவலமான விலங்கினை புணர்வதற்கு ஒப்பாகும்.

4 comments:

சந்தனமுல்லை said...

//மங்களூரு சம்பவத்தில் ராம் சேனா அமைப்பின் செயலானது கலாச்சார காவல் செயல் என்பதை காட்டிலும்,ஆணாதிக்க நிலை நாட்டல் எனக்கொள்வதே பொருத்தமாக இருக்கும்//

அது சரிதான்!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Muruganandan M.K. said...

பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கருத்துகளையும் செயற்பாடுகளையும் கண்டிப்பது உங்களைப் போலவே நியாய உணர்வுள்ள ஒவ்வொரு ஆண்மகனும் செய்ய வேண்டியது அவசியம்தான்.

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்