16 Mar 2009



வாஞ்சிநாதன் வரலாற்று பிழையா?

கார்த்திகை பாண்டியன்(பொன்னியின் செல்வன்) அவர்களின் "எனக்கு பிடித்தவர்கள்" பதிவை இன்றுதான் வாசிக்க நேர்ந்தது.தனக்கு பிடித்தவராக அவர் "வாஞ்சிநாதனை" குறிப்பிட்டு இருந்தார்.

அவருக்காக "அருந்ததியர் வாழும் வரலாறு" புத்தகத்தில் மாற்கு அவர்கள் பதிவு செய்து இருந்ததை "புரட்சியாளர் பெரியார்" என்ற வலைப்பூவில் இருந்து இங்கே மீள்பதிவு செய்கிறேன் ...சம்பந்தம் உடையோர் கோபித்து கொள்ள வேண்டாம்.
எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம். ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர். ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர். அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது. வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு, R. வாஞ்சி ஜயர்.


ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

8 comments:

Anonymous said...

100% true.

ஆண்ட்ரு சுபாசு said...

பெயருடனே கூறி இருக்கலாம்...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vijay tiruppur said...

உண்மை, டிலகரும் இதே வகைதான்

Anonymous said...

பார்த்துப் போங்கோ....அது.... அவாள் எடம்!

கொலைகுற்றவாளி காஞ்சிமடத்து சுப்புரமணியின் பலான பலான மேட்டர்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்து நாறிய கொண்டிருந்த சமயத்தில் அவன் எவ்வளவு பெரிய பொறுக்கியா இருந்தாலும் பரவாயில்ல எங்க இந்து மதத்துக்கு அவருதான் தலைவரு(கருமம் கருமம்) என்று பார்ப்பன பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார அமைப்புக்கள் வஜனம் பேசிக்கொண்டிருந்தன‌, வீதிக்கு வந்து போராடின., அந்த சமயத்தில் இரண்டு ரிக்ஷா ஓட்டும் சென்னைவாசிகள் அந்த மேட்டரை பேசினால் எப்படியிருக்கும் என்று புதிய கலாச்சாரத்தில் வந்த ஒரு கலாய்த்தல் கற்பனை, படித்து சிரித்து வயிறுவலித்தால் நான் பொறுப்பல்ல‌...


நபர் 1: என்ன மாமூ! பெரிய சாமி படா கில்லாடியா கீது! நாம இங்க முட்டி செத்துப் போய் கீறோம்... சாமீ இன்னாடான்னா.. பூ கொடுக்றேன், ஆசீர்வாதம் கொடுக்றேன்னுட்டு, ஊரான் பொண்டாட்டி, பொண்ணு, ஆயான்னு அல்லாருக்கும் ரூட் போட்டு "குஜால்' பண்ணிகீது! மேட்டரு படா சோக்காகீது பாத்தியா...?


நபர் 2: தோடா... சாமி இப்டி அநியாயமா ரவுடி மாரி கொலை பண்ணலாமான்னு கேளு. அது நாயம். ஒண்ணுக்கு போலாமா, ரெண்டுக்குப் போலாமான்னு கேக்குற! அறிவு கீதா உனுக்கு?

நபர் 1: நான் இன்னா கேக்குறேன், நீ இன்னா சொல்றே? ஒண்ணும் புர்லியா?

நபர் 2: புரியாம இன்னா? முதல்ல உன் முதுவுல கீற அழுக்க கழுவு. அப்பால சாமியப்பத்திப் பேசு. ரேசன் அரிசிய துண்ட்டு பன்னிக்குட்டி மாரி பெத்துப் போட்டுக்கினே கீற. நீ முருங்க குச்சி மாரி கீற. உனுக்கே இவ்ளோ கீதே, ஜெகத்குருன்னா சொம்மாவா? உன்ன மேரி ரிக்ஸா மெறிக்கிற வேலயா? யார்னாலும் அட்தவன் கஸ்டம் புரியாம கலாய்க்கக் கூடாது.

நபர் 1: தூ.. வாயக் கழுவு, சாமியாரா அவன்? மூஞ்சப் பாரு, அறுத்துப் போட்ட பன்னி மாரி. நம்ம டி.வி. அட்டேஸ்மென்ட்ல ஒரு பொடி பையன் சொல்வானே "ஆர்லீக்ஸ்னா நா அப்டியே சாப்டுவேன்னு'' அதமேரி ஆர்லிக்ஸ் மாமியவே அப்டியே சாப்ட்டுகிறான். அது போவுதுபா, ஊர்கோலம் மாரி, சீரங்கம் உஷா, ஜெயா, மைதிலி, அனுராதாக்கா.. அப்பாலிக்கா... நம்ம சொர்ணமாலியா... நல்லா மேய்ஞ்ச்சிக்கிறான் மாமூ...!


நபர் 2: வாயை மூடு! மேய்ஞ்சிகிறான், கீஞ்சுகிறான்னு சொல்லாதே! "என்ன வுடுங்கடா, நா எங்கன்னாப் போய்... மேய்ஞ்சிக்கேறேனு' அந்தாளு ஓட்னானுல்ல, வுட்டான்களா? எஸ்கேப் ஆனவனையும் புட்ச்சி இட்டாந்து அடைச்சு வச்சா இன்னாடா பண்ணுவான்? பால் குடி, தயிர் குடி, முந்திரி துண்ணு, பிஸ்த்தா துண்ணு, பழம் துண்ணு... ன்னு, அவன் வாயீ, வவுறு... சந்து... பொந்து எல்லாத்திலயும் வெடி மருந்த திணிச்சுட்டு... இப்ப வெடிச்சிருச்சி.. வெடிச்சிருச்சின்னு அலறுனா... அவன் இன்னாடா பண்ணுவான்?


நபர் 1: அதுக்காக ஊர் மேய சொல்லுதா? அம்ணகுண்டியா குந்திகினு ஒரு பொம்பிளய கூப்டலாமா? மாமிங்க பாவம் ரத்தகதி ரணகதி ஆயி அலறுதுங்கோ. நீ சாமியாருதான, அதான் உனுக்கு அத்து வைத்தியமோ, சித்த வைத்தியமோ ஏதோ ஒண்ணு வச்சிருக்கீல்ல, அத்த வச்சி சமாளிக்க வேண்டியத்தானே!


நபர் 2: கம்னு கெட... அதுபேரு அத்துவைதம். பெரீய்ய விசயம்லாம் இன்னான்னு புரியாம பேசக்கூடாது. அத்துவைதம் அப்படின்னா... நீ... நானு.. இந்த சாராயம்... கோட்டரு... ஆம்பள... பொம்பள... ஏணி... எருமாடு எல்லாம் மாயைன்னு அருத்தம். அவன் கரீட்டாதான் எல்லாத்தையும் பாத்துக்கிறான்.. அப்புக்கும்.. அப்துல்கலாமுக்கும் ஒரே மாரிதான் ஆசீர்வாதம் குடுத்துக்கிறான். அத்த யாரும் கேக்க மாட்றான். பொம்பள மேட்டர மட்டும் ஏண்டா கொடயிறீங்க? சொர்ணமால்யா பொண்ணு மாரி, அனுராதா தங்கச்சி மாரி அப்படீன்னு அவன் வித்யாசம் பாக்கிறதில்ல. நீ ஏன் பாக்கிற?

நபர் 1: அது இன்னா மாயையோ இன்னா எளவோ! கருவாட்டுக்கு அலயிற பெருச்சாளி மாறி கல்யாணம் ஆன மாமிங்களா பாத்து கலாஞ்சியிருக்கிறான். நம்மள தேவ்டியாளுக்கு பொறந்தவனுங்கோன்னு சொல்றானே, எதுக்குடா சொல்றான்னு ரோசனை பண்ணி ரோசனை பண்ணி பாத்திருக்கேன். இப்பதான் தெர்து. ஊரான் பொண்டாட்டியா பாத்து தேடித் தேடி மேஞ்சிருக்கானே, அவுனுக்கு அல்லா பொம்பளையும் தேவ்டியாளாத்தான் தெரியும். நல்ல வேளை மாமு. நம்மள்ளாம் சுத்தமில்லன்னு வுட்டான். சுத்தமான மாமிங்கதாம்பா பாவம்!


நபர் 2: இன்னாடா பாவம்? யார்னா அந்த சாமியாருக்கு நேந்த பாவத்த நெனச்சி பாத்தீங்களா? மூணு வேளை முனியாண்டி விலாஸ் பிரியாணி துண்ட்டு நீ மூடிக்னா இருப்பே? அவன் துண்ற அயிட்டம் எல்லாம் என்னா வெள்ளாட்டா? ஒரு சித்த வைத்தியங்கிட்ட போய் கேட்டுப் பாரு... பலான.. பலான அயிட்டம் துண்ணா அவன் கதி இன்னாவுண்ணு கேளு! கன்ட்ரோலு பண்ண முடியுமான்னு கேளு.


நபர் 1: புலி குகைக்குள்ளார போயிட்டு புடிங்கிடுச்சி.... புடிங்கிடுச்சி.. ன்னா? அங்க ஏன் நீ போறே அப்படீன்னு அந்த மாமிங்கள... யாராவது கேட்டீங்களா?


நபர் 2: ஆனந்த விகடன், கல்கீன்னு எல்லா பொஸ்தகத்திலியும் சாமி மூஞ்சில அருள் தெரியுது, அது தெரியுதுன்னு வேற எழுதிவுட்றான். அதப் படிச்சி படிச்சி மாமிங்க பேஜாராயிட்டாங்கோ... சாமிய சுத்தி பிகருங்கள நிக்கவுட்டு தொடக்கூடாது, படக்கூடாதுன்னா மன்சன் இன்னாடா பண்ண முடியும்?


நபர் 1: நீ சாமியாருதான. போக வேண்டியதானே... பட்ணத்தாரு, வள்ளலாரு மாரி.

நபர் 2: வுட்டாதானே! அப்புறம் 6000 கோடி சொத்த ஆரு நிர்வாகம் பண்றது? நீயும் நானும் பண்ண முடியுமா? இப்பகூட பாப்பாரப் பசங்க இன்னா சொல்றானுங்க? சாமி ஆஸ்பத்திரி கட்னாரு, காலேஜ் கட்னாருன்றான். இந்த வேலைய செய்யறதுக்கு ஏன்டா சாமி? இந்த வேலையத்தான் சினிமாக்காரன் விஜயகாந்தும் சாராய உடையாரும் செய்றானுங்களே...

நபர் 1: அவுங்க செய்யிற அல்லா வேலையும் செய்யணுமாம். அவனுகள மாரியே புல்லா துன்னனும். ஏசி ரூம்ல தூங்கணுமாம். ஆனா அது மட்டும் கூடாதாம். இன்னாடா நாயம் பேசுறீங்க?

-பச்சையப்பன்

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு இது பற்றி நண்பர் ஆதவாவும் சொன்னார் நண்பா.. சில வரலாற்று பிழைகள்.. நல்ல பதிவு..

ஆண்ட்ரு சுபாசு said...

நன்றி கார்த்திகை பாண்டியன் அவர்களே...கண்டிப்பாய் என்னால் இயன்ற அளவு நல்ல பதிவுகள் தர முயற்சிகிறேன்

ஆண்ட்ரு சுபாசு said...

@பச்சையப்பன்

நன்றி நண்பரே ...

ஆண்ட்ரு சுபாசு said...

@விஜய்

நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்...மீண்டும் வருக.